Saturday, May 16, 2009

ஈழத்தில் நடப்பது என்ன? ராஜபட்சே பேட்டி...

எமது விசேச நிருபர் டொங்கிரி செல்லப்பாவுக்கு உலக மகா கொடூரன் ராஜபட்சே பல அதிர்ச்சி தகவல்களை வெட்கமின்றி கொடுத்துள்ள சிறப்பு பேட்டி. இதைக் கேட்ட டொங்கிரி அதிர்ச்சி தாங்காமல் ஜன்னி வந்து மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவுல் சேர்க்கப்பட்டுள்ளார். அதிர்ச்சி தகவல்களை கேட்ட நிருபருக்கே இந்த நிலைமை என்றால் அங்கு அவதிப்படும் எம் மக்களை நினைக்கும் பொழுது...................!?

நிருபர் டொங்கிரி : வணக்கம் ராஜபட்சே! (எத்தனையோ பேருக்கு போடுறோம் சல்யூட்டு....ங்கோ...நீயும் ஒன்னு வச்சுக்கோ) நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஈழத்தில் நடப்பது என்ன? அப்பாவி தமிழர்களை நீங்கள் குண்டு போட்டுக் கொல்கிறீர்களாமே?

ராஜபட்சே: ஆத்தா எங்கள மட்டும் காப்பாத்து ஆத்தா. (இதுக்குத் தான் தமிழனுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் னு நினைச்சேன்...தமிழனுக்கு வக்காலத்து வாங்கிறயே...அப்ப நீ புலிதாண்டா? சந்தேகமே இல்ல நீ புலிதான்....இவனப் புடிச்சு உள்ளே போடுங்கடா.) வாங்க தமிழ் நிருபரே...எல்லாம் ஆத்தா செயல்.
டொங்கிரி : விடுதலைப்புலிகளை எப்படி வீழ்த்தினீர்கள், உங்களுடைய போர் தந்திரங்க்ளை கூற முடியுமா?

ராஜபட்சே: ஆத்தா மட்டும் இல்லாட்டி நாங்க இன்னும் பங்கர்க்குள்ள புலிகள் விமானத்தை எதிர்பார்த்து படுத்திட்டிருப்போம். அது கிடக்கட்டும்... போர் தந்திரமாவது புடலங்காய்யாவது? நாங்கள் எங்கே போரிட்டோம், எல்லாம் இந்திய ராணுவம்ந்தான் போரிட்டு விடுதலைப்புலிகளை வீழ்தியது. எல்லாம் எங்கள் ஆத்தா அருள்ன்னுதான் சொல்லவேண்டும்.

டொங்கிரி : வந்ததிலேர்ந்து ஆத்தா...ஆத்தாங்கிறியே...ங்கோ... அது உங்கள் குலதெய்வமா?

ராஜபட்சே: இல்லை சோனியாதான்..

டொங்கிரி : அதாவது இத்தாலி ஆத்தா...சரி. நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வந்திருக்குமே?

ராஜபட்சே: வந்திச்சே!

டொங்கிரி : கொந்தளிப்பு வந்திச்சினா எப்படி சமாளிச்சிங்கே?

ராஜபட்சே: நாங்க ஏன் சமாளிக்கனும், அதான் எங்கள் அண்ணன் கலைஞர் இருக்காருலே அவரு பார்த்துகிட்டார்.

டொங்கிரி :புரியும்படியாக சொல்லுங்க.

ராஜபட்சே:நாங்கள் அப்பாவி மக்களை கொல்லும்போதெல்லாம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வரும்.உண்மை அப்பாவி தமிழன் தீ குளித்து சாவான் அப்பொழுது எங்க அண்ணா கலைஞர் மனித சங்கிலி என்பார், உண்ணாவிரம் என்பார். உடன் தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்படும், தமிழ் உணர்வு நீர்த்துப்போகும்.நாங்கள் செய்யவேண்டிய வேலையை கலைஞர் செய்து முடிப்பார்.

டொங்கிரி :இது பயங்கர பித்தாலாட்டம் ஆகுமே? அதிகாரத்தில் இருக்கின்றவர்கள்தானே பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யவேண்டும் அவர்களே உண்ணாவிரம் அது இது என்று காலத்தை கடத்தினால் எப்படி?

ராஜபட்சே: சரியாக சொன்னீர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்! அப்பாவி தமிழர்களை கொல்லாதே! என்று இந்த ராஜபட்சே உண்ணாவிரதம் இருந்தால் எப்படி காமெடியாக இருக்குமோ, அதேபோல் தான் கலைஞர் உண்ணாவிரதமும்.

டொங்கிரி: தமிழ் நாட்டில் பத்திரிக்கை இருக்கிறார்களே அவர்கள் உங்கள் முகத்திரை கிழித்திருப்பார்களே?

டொங்கிரி:கிழித்தார்கள். நாங்கள் போடும் எலும்புத் துண்டுகளை நக்கிவிட்டு நாங்கள் சொல்வதை அப்படியே எழுதுபவர்கள் ஒரு வகை. உண்மை எழுதும் தமிழ் பத்திரிக்கையை கொஞ்சபேர்தான் படிப்பார்கள். அதனால எங்களுக்கு ஒரே ஜாலி...டெய்லி குண்டு குண்டா போட்டு தமிழர்களை கொன்னு கொன்னு விளையாடுவோம்......

டொங்கிரி: சரி தமிழ்நாட்டை விடுங்க, உலகநாடுகள் உங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்குமே.

ராஜபட்சே: அதை எங்க ஆத்தா பார்த்துக்குவா, சங்கரமேனனை அனுப்பி சரிகட்டிடுவா, அப்புறம் ஐ.நா. சபை பாங்கி (பான்}கீ}மூன்) நம்பியார அனுப்புவான்.. உலக நாடுகள் இலங்கையில் இன படுகொலை, அநியாயம்,அக்கிரமம் அப்படினு கத்திக்கிட்டே இருக்கும். நாங்கள் அப்பாவி மக்கனை கொன்னுக்கினே இருப்போம்.
டொங்கிரி:ஒபாமா போர் நிறுத்தம் என்று குரல் கொடுத்திருக்காரே!

ராஜபட்சே: ஒபாமா சொன்னதுற்குப் பிறகு பல ஆயிரம்பேரை கொன்றிருகிறோம். நீங்க என்னடானா ஒபாமா அது இதுனு பேசிகிட்டு இருக்கிங்கே.

டொங்கிரி:உங்ககிட்ட ஹிட்லரே தோத்துடுவாரு போல,

ராஜபட்சே: ஹிட்லர் இப்பொழுது இருந்தார்னா என்னை குருவா ஏத்துக்குவாரு...

டொங்கிரி: கொஞ்சம் விளக்கமா சொல்லமுடியுமா?

ராஜபட்சே: உலகமே தடை செய்யப்பட்டுள்ள இரசாயன கொத்து குண்டுகளை போட்டு கொத்து கொத்தாக கொல்வோம், உணவுக்காக வரிசையில் காத்துக்கிடக்கும் குழந்தைகலை குறி பார்த்து சுடுவோம், கொலையும் குத்துயுரும்மாக கிடக்கும் மக்களுக்கு மருந்து சப்பளைகளை தடைசெய்வோம்.
தமிழ் யுவதிகளை எங்கள் இராணுவ வீரர்களுக்கு விருந்துபடைப்போம். தமிழ் பெண்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக நடக்க வைப்போம், 15 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரையும் அடுத்த சந்ததி (புலிகள்) உருவாகாமல் இருப்பதற்கு கொன்றுவிடுவோம், வெள்ளை வேன் என்ற நம்பர் இல்லாத வாகனத்தில் இளஞர்கள் அத்தனை பேரையும் கடத்தி கொண்டு போய் கொன்று விடுவோம், குழந்தைகளை அத்தனை பேரையும் அவர்களிடைய தாய் தந்தைகளிடமிருந்து கதற கதற பிரித்து கொண்டுபோய் பட்டினி போடுவோம், பாதுகாப்பு வளையத்துக்கு வரவழைத்து மொத்தமாக கொத்து குண்டு போட்வோம்........................

டொங்கிரி:சரி விசயத்துக்கு வருகிறேன், தனி ஈழம் கிடைக்குமா? கிடைக்காதா?

ராஜபட்சே: தனி ஈழம் நான் கொடுத்தால் கூட அங்கு வாழ தமிழ் இனம் இல்லை கூண்டோட அழித்துவிட்டேன். அப்படியே இருக்கும் கொஞ்சநஞ்சப் பேரும் உங்க ஊரு கீழ்பாக்கம் கேசுகளா அலைகிறார்கள்.

டொங்கிரி: போதும் நிறுத்து எனக்கு தலை சுற்றுகிறது, இந்த படு பாதக செயல் செய்வதற்கு உனக்கு மனசு எப்படி வந்தது நீ மனுசனா? மிருகமா?

ராஜபட்சே: எதற்கு கோவபடுகிறீர்கள் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கோமாளிகளை விடவா நான் மோசமானவன்? இங்கு குவியல் குவியலாக மக்களை கொன்று போரிட்டுக்கொண்டுருக்கும் பொழுது கூட தமிழ் நாட்டில் நாங்கள் போரை நிறுத்திவிட்டோம், என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேட்டி கொடுக்கிறார்கள்.
அப்பொழுதுகூட என் தம்பி ங்கோத்தா பய (குரங்கு பய) நாங்கள் போரை நிறுத்தவில்லை என்று தகுந்த ஆதாரத்துடன் வெளி நாட்டு தொலைகாட்சிக்கு பேட்டி கொடுக்குறார். அதற்கு பிறகும் ஈவு இரக்கம் இல்லாமல் மழை நின்றுவிட்டது, தூவானம் விடவில்லை என்றும், இலங்கை பிரச்சனை தேர்தலில் எங்கள் வெற்றியை பாதிகாது என்றும், இலங்கைப் பிரச்சனை முடிந்துபோனப் பிரச்சனை என்றும் நா கூசாமல் நெஞ்சில் ஈரம் இல்லாமல் சொல்கிறார்களே இவர்களைவிடவா நான் மேசமானவன். இன்னொன்றும் கூறுகிறேன் மீண்டும் எங்கள் ஆத்தாதான் ஆட்சியைபிடிப்பார்.

டொங்கிரி: எப்படி?

ராஜபட்சே: காசுக்காக எதையும் சொய்வார்கள் தமிழர்கள். காசு தேர்தலில் விளையாடிவிட்டது.தமிழனுக்கு விரோதி தமிழன் தான் என்பதை இப்பொழுதாவது புரியுதா?

அட சாமீ மயக்கமே வருதுடா.

No comments: