Monday, December 13, 2010

இப்படியும் சிலர் .

ரஜினி பிறந்த நாள் - அனைத்துதரப்பினரும் வாழ்த்து. (மகிழ்ச்சி)
ஆனால் டிவி, ரேடியோ-வில் டிசம்பர் 12ம் தேதி வரும் ரஜினி காந் பிறந்த நாள் அறிவிப்புகள், மற்றும் நிகழ்ச்சிகள் வந்ததே தவிர   டிசம்பர் 11 நாள் பாரதியார் பிறந்த நாளைப்பற்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் வரவில்லை. (வாழ்க தேசப்பற்று)

எப்படியிருந்த நான் .


இப்படி ஆனதுக்கு தேவராஜ் - க்குதான்  நன்றி சொல்லனும் .

 தேவராஜ் என்ற ரஜினி  ரசிகர்.

என்னுடைய பார்வையில், ஒரு அரசியல் தலைவனுக்கு தொண்டனாகவோ, சினிமா நடிகனுக்கு ரசிகனாக இருப்பவன் மன நிலை பாதிக்கப்பட்டவனாகத்தான் இருப்பான். ஏனென்றால்  தன் குடும்பம் வறுமையில் சிக்கி அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும்பொழுது, இவன் தன் தலைவனுக்கோ, நடிகனுக்கோ தன்னுடைய உடல் ,பொருள் , ஆவி (ஒரு வித போதையில்)  அத்தனையும் இழந்து சின்னாப்பின்னமாகி, தான் மட்டுமல்லாது தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அத்தனைபேரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்து, நாசமாகிப்போன பல பேரை சந்தித்திருக்கிறேன்.


நடிகருக்கு பிறந்த நாள், மற்றும் புது படம் வெளிவரும் பொழுது,




கட் அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வது , பால் குடம் தூக்குவது

இப்படி பல அருவருக்கத்தக்க காரியங்களை செய்கிறார்கள் ..

        சமீபத்தில் நாளிதழில் புகைப்படக் கலைஞராக பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரசிகன் என்ற போர்வையில் பல நல்ல காரியங்கள் செய்யும் நல்லவர்களும் உள்ளனர்  என்று கூறி, தேவராஜ் என்ற ரஜினி ரசிகரைப்பற்றி கூறினார்.
 
      சீரனாயகன்பாலயத்தைச் சேர்ந்த தேவராஜ் என்ற ரஜினி  ரசிகர் கடந்த 14 வருடமாக ரஜினிகாந் பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் நாளை முன்னிட்டு அனாதை சிறுவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர், பிச்சைக்காரர்களுக்கு  இலவசமாக  முடிதிருத்தம் செய்கிறார்.





    தேவராஜை தொடர்புகொண்டு பேசியபொழுது, தலைவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூருக்குச் சென்று இலவசமாக முடி திருத்தம் செய்துவிட்டு இப்பொழுதான் அனுப்பர்பாலயதுக்கு சில பேருக்கு முடி திருத்தும் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன்  என்று கூறினார். "உங்கள் தலைவருக்காக இப்படி ஊர் ஊராகச் சென்று வெட்டி வேலையைச் செய்தால் உங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது?" என்று கேட்டபொழுது, "அப்படிச்சொல்லாதீர்கள். இதில் எனக்கு ஆத்ம திருப்தி உள்ளது.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். நான் என்னுடைய தலைவன் பெயரில் செய்கிறேன் அவ்வளவுதான். என்னுடைய மகன் பெங்களூரில் சாப்டுவேர் கம்பெனியில் பணிபுரிகிறார். பெரிய பெண்ணை பெங்களூரில் திருமணம் செய்துவைத்துவிட்டேன். இளைய பெண் பி.இ முடித்துவிட்டு சென்னையில் வேலைசெய்கிறார்", என்றார்.


   நாரயணன் கிருஷ்ணன் தன்னலமற்ற தூய சமூக சேவை மூலம் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். படித்த நாரயணன் மட்டு மின்றி படிக்காத வெளியில் தெரியாத பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கின்றனர்.   ஒரு பொறுப்புள்ள தந்தையாக மட்டுமில்லாது, அர்தமுள்ள ரசிகனாகவும் இருக்கும் தேவராஜுக்கு ஒரு ஜே போடுவோம்.








Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு - சில காட்சிகள், சில சங்கதிகள்-3

                                          கடைசி நாளன்று உலக செம் மொழி மாநாடு பற்றிய சிறப்பு பதிவு வரும்.

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு - சில காட்சிகள், சில சங்கதிகள்-2

செம்மொழி மாநாடு - சில காட்சிகள், சில சங்கதிகள்-2







































 கடைசி நாளன்று உலக செம் மொழி மாநாடு பற்றிய சிறப்பு பதிவு வரும்.


Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடு - சில காட்சிகள், சில சங்கதிகள்.


நேற்று காலை 10.30 மணிக்கு தேசிய கீதத்துடன் மாநாடு துவங்கியது.

அமொக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் செ. குழந்தை சாமி, இலங்கை பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மலரை கவனர் வெளியிட ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, கலைஞர் செம்மொழி தமிழ்விருது, மற்றும் 10 லட்சம் ரூபாய்கான  காசோலையும், ஜம்பொன் திருவள்ளுவர் சிலையிம் வழங்கப்பட்டன.
மாலை கோவை மருத்துவக் கல்லூ  முன் அமைக்கப்படிருந்த மேடையிருந்து முதல்வர், கவர்னர், ஜனாதிபதி ஆகியோர் இனியவை நாற்பது  - அலங்கார ஊர்வலத்தைக் கண்டு களித்தனர்.


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது எப்படி?
மாநாட்டில் முதல்வர் பேச்சு

தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம் - பிரதிபா பாட்டீல்.

 இப்படி கோலாகாலமாக துவங்கிய தமிழ் செம்மொழி மாநாட்டை சிலர் ஏன் விமர்சனம் செய்கிறார்கள்?

தமிழுக்கு விழா எடுப்பது ஒரு குத்தமாயா?
தமிழ் விழா எடுக்க கலைஞருக்கு தகுதியில்லையா? - இப்படி பல கண்டனங்களுக்கு நடவில்  மாநாடு நடந்துகொண்டுருக்கிறது.
தமிழுக்கு விழா என்றால் தமிழனுக்கு விழா எடுதமாதிரிதான் என்று கூறுகின்றனர்.
தமிழினம்  வாழ்வா சாவா என்று பேராடிக்கொண்டிருக்கிறது, ஒரு பக்கம் இந்த நேரத்தில் தேவையா? என்றும் கூகின்றனர்.

நண்பர்களே! உலக தமிழ் மாநாட்டினால் தமிழ் மொழிக்கு  பெருமையா? தேவையா? என்பதை பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தவும்.
மாநாடு நடக்கும் 5 நாட்களும் படங்கள் வரும். மாநாட்டின் கடைசி நாளன்று உலக செம் மொழி மாநாடு பற்றிய சிறப்பு பதிவு வரும்

Friday, June 18, 2010

கோவையும், செம்மொழி மாநாடும்

.
        
மாநாடு சில காட்சிகள்.


      பல விமர்ரிசனங்களுக்கு இடையில் ஜூன் 23 ஆம் தேதி கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடக்கவிருக்கிறது. குற்றங்களைப் புறம் தள்ளிவிட்டுட்டு உலகத்தமிழ் மாநாட்டினால் என்ன பயன் என்று பார்தால், கோவை நகருக்கு பல கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் பல நடந்துள்ளது. குறிப்பாக சாலை விரிவாக்கம், அழகிய   நவீன பூங்காக்கள், மற்றும் சாலையோர பூங்காக்கள், ஆங்காங்கே உயர் மட்ட கோபுர விளக்குகள், பஸ் பயணிகளுக்காக புதிய நிழல்குடைகள் அமைக்ப்பட்டுள்ளன.  
        
                                   உலகத் தமிழ் மாநாட்டினால் தமிழ் மொழிக்கு என்ன நன்மை?  தமிழ் மொழிக்கு நன்மையா? என்பதை விட கட்சி க்காரர்களுக்கு அதிக நன்மை.  பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபிவிருத்தி திட்டபணிகள் சரியாக திட்டமிடப்படாததாலும், கால அவகாசம் இல்லாமையாலும் பல இடங்களில் பணிகள் சரியாக செய்யவில்லை. கலைஞரின்  சொந்த பேரன்கள், Cloud nine, Red Giant என்று  ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொண்டு நடத்தும் சினிமா வியாபார  கம்பெனிகளுக்கு நல்ல  தமிழில் பெயர் கிடைக்கவில்லை. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அனைத்து வியாபார நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கூறுவது நல்ல விந்தை.  

   அழகிய பல வண்ணங்களில் தமிழர்களுடைய பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபளிக்கும் படி ஆங்காங்கே ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. பார்பதற்கு  ரம்மியமாக உள்ளது. அதுபோல்  அதியமான் அவ்வைக்கு கள்ளும், நெல்லிக்கனியும் கொடுக்கும் காட்சியை தமிழ் செம்மொழி மாநாட்டில் வைக்கவேண்டும் என்று கள் இறக்க அனுமதி கேட்டு போராடும் இயக்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசு வைக்கவில்லை என்று தெரிந்தவுடன், அவர்களே வண்ண ஓவியத்தை வைத்துவிட்டனர். 
.
சாலை எங்கே? மரம் எங்கே? பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்ட  பொதுமக்கள் எதிர்பையும் மீறி மரம் வெட்டப்படுகிறது. பங்கு சரியாக போய்விட்டதோ ! அதனால்  அரசு அதிகார வர்கம் கண்டுகொள்ளவில்லை. 
     



ஆகா என்ன அழகு!



   சாலையோர பூங்காக்கள்,



கனிமொழி இல்லையென்றால் } செம்மொழி இல்லை


பல இடங்களில் பணிகள் சரியாக செய்யவில்லை.


ஸ்டாலின் மாநாட்டு பணிகள் ஆய்வு, கலைஞர் ஓய்வு.



அதியமான் அவ்வைக்கு கள்ளும், நெல்லிக்கனியும் கொடுக்கும் காட்சி


சாலை எங்கே? மரம் எங்கே?


மாநாடு நடந்தாதான் அந்த நகருக்கு  அபிவிருத்தி பணிகள் நடக்கும் என்றால், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நகரிலும் நடத்தப்படவேண்டும். 
பல கோடி ரூபாய் செலவில் நடக்கும் மாநாடு   கட்சி மாநாடாக ஆகிவிடகூடாது என்பது தான் பொது மக்களின் விருப்பம்.