Friday, May 8, 2009

இலங்கையில் தொடரும் பட்டினிச் சாவுகள்

இலங்கை வன்னி போர்ப்பகுதியில் பாதுகாப்பு மண்டலத்துக்குள் வசிக்கும் மக்களுக்கு போதிய உணவு கிடைக்காததால், பட்டினிச் சாவுகள் அதிகரித்திருப்பதாக புலிகள் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உணவுப் பொருள்கள் விநியோகிப்பதற்கான அறிகுறிகளே தெரியவில்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் வான் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் மருத்துவமனை தற்போது வேறு இடத்தில் செயல்பட்டு வருவதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேரில் 18 பேர் இறந்துவிட்டதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்பட்டிருப்பதால், நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

No comments: