Wednesday, March 3, 2010

அஜால் குஜால் சாமியாரின் அந்தரங்கம்.

 

                 கடந்த மாதம் காஞ்சியில் தேவநாதன்,  இன்று நித்தியானந்தன்.  





              மேலே உள்ள படத்தில் உள்ள சாமியாரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.  கதவை திற காற்று வரட்டும் என்று பிரபல  வார பத்திரிக்கையில் ஆன்மீகத்தொடர் ஒன்று எழுதி வருகிறார். கதவை திறந்தார் காற்று வந்ததோ இல்லையோ நடிகை வந்தார் ராஜசேகர் என்ற நித்தியானந்த போலி சாமியார் அரகேற்றம் நடத்திவிட்டார்.
காஞ்சிபுரம் தேவநாதநாதன் கண்றாவி கருவரை காட்சிகள் கடந்த மாதம் பட்டிதொட்டியெங்கும் சிடி, மற்றும் இணைய தளத்தின் வழியாக  நாறியது. இன்று நித்தாயானந்தன் என்ற போலி சாமியார் அந்தரங்க கண்றாவி வீதியொங்கும் நாறுகிறது ( சன் நõயூஸ்) . டில்லியில் சாய்பாபா பக்தர் என்று கூறிக்கொண்டு சாய்பாபா கோயில் கட்டி விபச்சாரம் செய்த சிவ்முரத் திவேதி  என்ற போலி சாமியார் டில்லி போலிசால் கைது சொய்யப்பட்டார்.
கல்கி பகவான் ஆசிரமம் சூறை, கல்கி பகவான் அவதாரம் என்று கூறிக்கொண்டு ஆந்திராவில் ஒரு போலி சாமியார் பக்தர்களிடம் பணமேசடி சொய்ததாக புகார். மேலே கூறப்பட்ட அத்தனை நிகழ்வுகளும் ஏன் தொடர்கிறது.

 போலி சாமியார்களை மட்டும் குறை கூறி பயன் இல்லை. போலி உருவாவதற்கு காரணம் அறியாமையில் உள்ள மக்கள் தான். மக்கள் என்று பொதுவாக கூறினால் யார்? அடிதட்டு மக்கள் அன்றாட காய்சிகள்  நித்தாயனந்த ஆசிரமத்துக்கோ அல்லது கல்கி பகவான் ஆசிரமத்துக்கோ பேவது இல்லை.  நடுத்தர, மற்றும் மேல்தட்டு மக்களே அவ்வாறான ஆசிரமத்துக்கு செல்வதும், அள்ளிக்கொடுப்பதும் போலிகள் உருவாவதற்கு ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர்.

அடித்தட்டு மக்கள் அவர்கள் வசதிக்கு கிராமத்தில் சின்ன சின்ன போலி சாமியார்கள் தோன்றுகõறார்கள்.  ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் போலி சாமியார்கள் இருப்பார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனை நம்பலாம், கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம். நான்தான் கடவுள் என்று சொல்பவனை நம்பாதே. சாமியை நம்பு ஆசாமியை நம்பாதே.  பேராசை, வஞ்சகம், அவசரம், அறியாமை, இருக்கும் வரை ஒரு பெரியார் இல்லை லட்சம் பெரியார் வந்தால் கூட மக்களை திருத்தமுடியாது. நேற்று தேவநாதன், இன்று நித்தியானந்தன், நானை வேறொருவன்.

3 comments:

ப.கந்தசாமி said...

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று எழுதியிருப்பது மிகவும் சரி.

venkat said...

புதிய வருகைக்கு நன்றி

Unknown said...

melum yezhudhungal avarai pattri . . .