Tuesday, June 9, 2009

சுற்றுப்புற சூழல் தினமும், குளோபல் வாமிங்கும், அரசியல்வாதிகளும்........!?..!?.



உலகம் முழுவதும் பூமிப்பந்து வெப்பமடைவதைக்கண்டு உலகமே அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில், நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அரசியல் செய்வதற்கு அதுவும் ஒரு நாளாக பயன்படுகிறது அவ்வளவுதான்.

அரசியல்வாதிகளின் பிறந்த நாள் மற்றும் கட்சியின் முக்கியமான நாட்களில் தன்னை சமூக சேவகனாக காட்டிக்கொள்வதற்கும், தனி நபர் மற்றும் கட்சி விளம்பரத்திற்காகவும், 5 ஆயிரம் மரகன்றுகள் நடுகின்றோம், 5 லட்சம் மரக் கன்றுகள் ஒரே நாளில் நடுகின்றோம், என்று பரபரப்புக்காக மரம் நடுவது போன்று பேப்பர்களில் படம் வருகிறது அவ்வளவுதான். உண்மையில் அத்தனை மரங்களும் நடப்படுகின்றனவா?, நடப்பட்ட மரக் கன்றுகள் கண்காணிக்கப்படுகின்றனவா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பாமக வின் பசுமை தாயகம் சார்பில் பல லட்சம் மரங்கள் நடப்பட்டதாக செய்தி, மற்றும், கலைஞர் பிறந்த நாள் சார்பில் மரங்கள் நடப்பட்டன, ஈசா யோக மையத்தின் ( ஜக்கி வாசுதேவ்) சார்பில் பல லட்சம் மரம் நடப்பட்டதாக செய்தி, அத்தனை மரக்ன்றுகளும் உண்மையில் நடப்பட்டிருந்தால் தமிழ் நாடு சோலை வனமாகியிருக்கும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

சுற்றுப்புற சூழலால் பூமி எவ்வாறு வெப்பமடைகிறது, ஒற்றைகரிம வாயுவின் (தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரிம வாயுகள்) எறிசிதைவினால் சுற்றுப்புற சூழல் சூடாகி பூமி பந்து வெப்பமடைகிறது.

வெப்பமடைவதைக்கண்டு ஏன் பயப்பட வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன் இமய மலையின் உச்சி சிகரத்தின் புகைப்படத்தை பார்கும் பொழுது அடர்ந்த பனியால் போர்வை போர்த்திக்கொண்டு இருப்பது போல் அழகாக காணப்படுகிறது. ஆனால் தற்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது, முற்றிலும் பனி உருகி அணிகலன் அத்தனையும் இழந்த விதவையைப் போல் விகாரமாக காட்சி அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் ஆர்டிக் பகுதி முழுவதும் உருகி, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே (ஓசோன் படலம் பாதிப்பால் புற்று நோய், மற்றும் புதிய பதிய நோய்கள், மற்றும் பருவ நிலை மாற்றங்கள், மழை பொழிவு குறைவு, வெள்ளம், வறட்சி ) அழிவு உண்டாக்கும்.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகளை கட்டுப்படுத்துகிறது, தாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடாக இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த மரக்கன்றுகளை நடுவோம். ராமர் இலங்கைக்கு பாலம் கட்டும்பொழுது அணிலின் பங்கு எந்தஅளவுக்கு இருந்ததோ, அதே போல் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம்மால் முடிந்த சின்ன பங்கு இருக்கட்டும்

1 comment:

RAGUNATHAN said...

விரைவில் நலம் பெற வாழ்த்துகள்