Wednesday, November 11, 2009

மூன்று மணி நேர ஹீரோ..!..!..!


கோவையின் இதயப் பகுதியான டவுண்ஹால், ஒப்பனக்கார வீதி, உக்கடம், ஆகிய பகுதிகளில் மூன்று மணி நேரம் ஒரே அட்காசம் தான் யாராலும் ஒன்றும் பன்ன முடியவில்லை. பொது மக்கள் மத்தியில் ஒரே பீதி கலவரம். போலிஸ்காரர்களாலும் வேடிக்கை பார்க்கதான் முடிந்தது. அப்படி என்னதான் நடந்தது. மூன்று மணி நேர ஆட்டத்துக்கு முடிவு, வளர்த்த கடா மார்பில் முட்டிய கதையாக வளர்த்த எஜமானனையே முட்டி கைகளை ஒடித்து மிதித்து மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டுதான் ஓய்ந்தது. கடைசியில் உங்களால் என்னை ஒன்னும் பன்னமுடியாது என்றும் நானாக பார்த்து நிறுத்தினால் உண்டு காளை மாடு தானக காந்தி பார்க் பகுதியில் நின்றுவிட்டது.  வழக்கம் போல் கடைசியில் போலிஸ் மாட்டை மடக்கி பிடித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்டனர்.