Sunday, October 25, 2009

முதலில் படத்தைப் பாருங்கள் பிறகு பேசுங்கள்.




 

 

 


 







 
.
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
போதும்  அடுத்த படம் வேண்டாம்.



சிந்திக்கும் திறன், செயல்,  காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
மாறிக்கொண்டே இருப்பது ஒன்றுதான் மாறாமல் இருப்பவை.
இது மரம், மனிதன, விலங்குகள், இயற்க்கை அத்தனைக்கும் பொது.
கோவை மருத மலை கோயிலில் நாயும் குரங்கும் செய்யும் சேட்டைகள் வித்தியாசமாக இருந்து. திரும்பி வரும் வழியில் ஒரு பெரியவரிடம் இந்த படங்களை காட்டியது தான் தாமதம் நாயும் குரங்கும் சண்டைதானே போடும். இது என்ன காட்சி எல்லாம் கலி முத்திரிச்சி என்று வெடுக் திரும்பு சென்றுவிட்டார்.
மனிதனை விட நாங்கள் எந்தவிததிலும் குறைந்தவன் இல்லை என்று நாயும் குரங்கும் சொல்வதுபோல் இருந்தது, மேலே கண்ட காட்சி.

Friday, October 16, 2009

தமிழர்கள் கண்டிப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும்...ஏன்?





தமிழகத்தில் இன்று  தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கைகள், புத்தாடைகள்,
இனிப்பு வகைகள் போன்றவற்றிற்கு பஞ்சமில்லை.

தீபாவளி தமிழர்கள் பண்டிகையா, நரகாசூரன் இருந்தானா,
தீபாவளி கட்டுக்கதை போன்று வலைப்பதிவுகளில் நண்பர்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது போகட்டும். தீபாவளியை தமிழர்களாகிய நாம் ஏன் கொண்டாட வேண்டும்
என்பதை ரூம் போட்டு யோசித்ததில் கிடைத்த பதில் இதுதான். அதாவது,


ராஜபட்ச மனம் மாறி 3 லட்ச தமிழ் மக்களையும்
அவரவர்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி
தீபாவளிக்கு பரிசும் கொடுத்துக் கொடுத்து கைகள் சிவக்க நின்று கொண்டிருக்கிறார் என்று அங்கு காலியாகிவிட்ட முகாமுக்கு போடப்பட்டுள்ள வாட்ச்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

இங்கே முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதிமன்ற
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 142 அடிக்கும் மேலாக 160 அடி
தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், புதிய அணை
தேவையில்லை என்றும் கேரள முதல் மந்திரி அச்சுதானந் கூறிவிட்டார்.

சக இந்தியரின் மனம் நோகும்படி, அவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று
இனி சொல்ல மாட்டோம் என்றும் காவிரியில்  எங்களுக்கு குடிக்கத் தண்ணி இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு கொடுப்போம் என்று கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா சொல்லிபுட்டார்.

பாலாறு மட்டுமல்ல, மோர், தயிர், வெண்ணெய், நெய், டால்டா, மசகு, குரூடு என்று எந்த ஆறும் எங்களுக்கு வேண்டாம். அதில் அணை மட்டுமல்ல
அதில் நின்று சின்ன கோவணம் கூட கட்டமாட்டோம் என்று
ஆந்திரா முதல்வர் ரோசய்யா ரோஷத்துடன் சொல்லிவிட்டார். எல்லாம் தமிழருக்காக....கலைஞருக்காக.

 டி.ஆர்.பாலு, திருமா, கனிமொழி அன்ட் கோ சொன்ன தகவலைக் கேட்டு
இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அழிந்து போன/ அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்காய் கண்ணீர் விட்டு கதறி மிகவும் சோகமாக உள்ளனர் .

ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனறு எல்லா மாநில மக்களும் தமிழருக்கு பேருதவிகள் நெறய்யயயயய செய்யத் துவங்கிவிட்டார்கள்.

அதனால் நாமும் அவர்களது பண்டிகையை வெட்கமில்லாமல் கொண்டாடுவோம்.

கொள்ளையோ கொள்ளை!.....



தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில்
வியாபாரிகள் லாபம் அதிகம் சம்பாதிக்கும்பொருட்டு
பொருகளை அதிக லாபதில் விற்று அதிக லாபம் கொள்ளை அடிப்பார்கள். ஆனால் அரசாங்கம் அவ்வாறு சொய்யுமா? அரசாங்கம் பகல் கொள்ளை அடிக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதனால் பஸ்களில்  அளவுகதிகமாக கூட்டம் அலைமோதுகிறது. அரசாங்க பஸ்களில் எக்ஸபிஸ் என்றும், பாயிண்ட்  டு பாயிண்ட என்று  போர்டை மாட்டிக்கொண்டு அதிக கட்டணத்தை வசூலிக்கறது. கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் திருத்தப்பட்ட கட்டண விவரம்.

இது பகல் கொள்ளை இல்லையா? பக்கத்து மாநிலமான கேரளாவில் இது நடக்குமா? மக்கள் ரோட்டில் இறங்கி போராட ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் சக்திக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது, நமக்கேன் வம்பு என்று  கேட்குற காசை குடுத்துவிட்டு ஊர் போய் சேர்வதிலேயே  கவனமாக இருக்கிறார்கள். மக்களுடைய மறதியும், சுயநலமும், அரசியல்வாதிகளுக்கு வசதியாகப்போய்விட்டது. தமிழனுக்கு சூடு சுரனை எல்லாம் போய் சுயநலவாதியாக மாறிவிட்டான்,என்று சொல்வதை தவிற வேறு என்ன சொல்ல?

Saturday, October 10, 2009

சினிமாவும் சீரழிவும்...


ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.சமீபத்தில் ஒரு பத்திரிகையில் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட செய்தி, எந்தவிதத்திலும் சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. இப்படிச் செய்திகள் பிரசுரிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.

       அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.பிராந்திக்கும், 

    பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் (பன்ழ்ய்ர்ஸ்ங்ழ்) எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!ஆனால் ஊடகங்களில் கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமோ பல மடங்கு அதிகம். இவர்களது கலைச்சேவையால் மொழி வளர்ச்சி அடைகிறதா? நமது கலாசாரம் மேன்மையடைகிறதா? சமுதாயப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றனவா? நாளைய தலைமுறைக்கு நல்ல பல கருத்துகளை முன்வைத்துக் கடமையாற்றுகிறதா? வரிவிலக்குக்காக தமிழில் பெயரை வைத்துவிட்டு தமிழையும் தமிழனின் கலாசாரத்தையும் சீரழிப்பதைத்தவிர இவர்களது கலைச்சேவைதான் என்ன என்று யாராவது விளக்கினால் நலம்.அரிதாரம் பூசும் நடிகர்கள், தங்களது துறையில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களுக்காகவும், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் எந்தவிதத்தில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களது மனசாட்சியே கூறும். இவர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் தங்களது முகத்தைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நலம். நடிகரானாலும் நடிகையானாலும் இவர்களது சாதனைகளின் அடிப்படை எழுத்தாளர்களின் கற்பனாசக்தியும் பேனா வலிமையும்தான். நல்ல கதை அமையாத திரைப்படங்கள் நடித்தது யாராக இருந்தாலும் ஓடுவதில்லை என்பதுதான் திரையுலக சரித்திரம் கூறும் உண்மை.


       பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!
 நன்றி : தினமணி

Saturday, October 3, 2009

மகாத்தமாவும் மாமிசமும்

 

 
கோவையில்  (2-10-09) விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ள கடைகள் ...



 காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக  (அக்டோபர் 2) ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  காந்திய கொள்கைக்கும்  அவரது புகழுக்கும் மரியாதை தரும்பொருட்டு அக்டோபர் 2 தேதி  மத்திய மாநில அரசுகள் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டதோடு மாமிசம், மது போன்ற வஸ்துகளை அகடோபர் 2 -ல் நாடெங்கிலும் விற்பனைக்கு  தடை செய்யப்பட்டுள்ளது.

         மகாத்மா காந்தியின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை குறைந்த  காரணத்தால் இன்று நாட்டின் பல பகுதிகளில் தெருவெங்கும் மது கடைகள் திறந்து  மகாத்மாவுக்கு நாம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். வருடத்தின் ஒரு நாள் அக்டோபர் 2 ம்தேதி மட்டுமாவது மது, மாமிச கடைகள்  மூடிவிட்டு காந்திக்கு மரியாதை செய்யலாமே!?...  

Friday, October 2, 2009

காந்தி ஜெயந்தி






கோவையில்  (2-10-09) விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ள கடைகள் ...

 காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக  (அக்டோபர் 2) ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  காந்திய கொள்கைக்கும்  அவரது புகழுக்கும் மரியாதை தரும்பொருட்டு அக்டோபர் 2 தேதி  மத்திய மாநில அரசுகள் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டதோடு மாமிசம், மது போன்ற வஸ்துகளை அகடோபர் 2 -ல் நாடெங்கிலும் விற்பனைக்கு  தடை செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை குறைந்த  காரணத்தால் இன்று நாட்டின் பல பகுதிகளில் தெருவெங்கும் மது கடைகள் திறந்து  மகாத்மாவுக்கு நாம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். வருடத்தின் ஒரு நாள் அக்டோபர் 2 ம்தேதி மட்டுமாவது மது, மாமிச கடைகள்  மூடிவிட்டு காந்திக்கு மரியாதை செய்யலாமே!?...   தேவைகளை குறைத்து எளிமையாக வாழவேண்டும் என்று கூறினார். அது ஒர்  உயர்ந்த  வாழ்க்கை முறை. காந்திய கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதால்தான்  இன்று நாடாகட்டும் தனி மனிதனாகட்டும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.