Friday, October 16, 2009

கொள்ளையோ கொள்ளை!.....



தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில்
வியாபாரிகள் லாபம் அதிகம் சம்பாதிக்கும்பொருட்டு
பொருகளை அதிக லாபதில் விற்று அதிக லாபம் கொள்ளை அடிப்பார்கள். ஆனால் அரசாங்கம் அவ்வாறு சொய்யுமா? அரசாங்கம் பகல் கொள்ளை அடிக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதனால் பஸ்களில்  அளவுகதிகமாக கூட்டம் அலைமோதுகிறது. அரசாங்க பஸ்களில் எக்ஸபிஸ் என்றும், பாயிண்ட்  டு பாயிண்ட என்று  போர்டை மாட்டிக்கொண்டு அதிக கட்டணத்தை வசூலிக்கறது. கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் திருத்தப்பட்ட கட்டண விவரம்.

இது பகல் கொள்ளை இல்லையா? பக்கத்து மாநிலமான கேரளாவில் இது நடக்குமா? மக்கள் ரோட்டில் இறங்கி போராட ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் சக்திக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது, நமக்கேன் வம்பு என்று  கேட்குற காசை குடுத்துவிட்டு ஊர் போய் சேர்வதிலேயே  கவனமாக இருக்கிறார்கள். மக்களுடைய மறதியும், சுயநலமும், அரசியல்வாதிகளுக்கு வசதியாகப்போய்விட்டது. தமிழனுக்கு சூடு சுரனை எல்லாம் போய் சுயநலவாதியாக மாறிவிட்டான்,என்று சொல்வதை தவிற வேறு என்ன சொல்ல?

No comments: