Tuesday, June 2, 2009

அண்ணன் அழகிரிக்கு .......




புது டில்லியில் ரயிலை தவறவிட்ட பயணிகளை பத்திரமாக சென்னைக்கு திருப்பி அனுப்பினார். வட இந்திய பத்திரிக்கைகள் புகழாரம். நேற்றைய கலைஞர் டிவியில் செய்தி. அழகிரி அதிரடி ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. தமிழக இரயில்வேயில் ஏகப்பட்ட நிலுவை வேலைகள் (கேஜ் கன்வர்சன், மேம்பாலம் கட்டுதல், மின்மயமாக்கல்) பாக்கி இருக்கிறது. அந்த வேலைகள் எல்லாம் நன்றாக முடிக்க வேண்டுமானால் தமிழகத்துக்கு ரயில்வே மந்திரி வேண்டும். குறைந்தது இணை அமைச்சராவது வேண்டும். கலைஞர் எப்பாடுபட்டாவது தமிழக நலன் கருதி வாங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் கலைஞரால் குடும்பத்துக்கு யாரயாருக்கு என்ன வாங்குவது என்ற பிரச்சனையில் தமிழகத்தின் நலனை மறந்துவிட்டார். ரயில்வே இணை அமைச்சர் பதவி கேரளா தட்டிக்கொண்டு போய்விட்டது. இனி தமிழகத்தின் கதி அதோ கதிதான். முந்தய ஆட்சிகாலத்தில் பமக ரயில்வே இணை அமைச்சர்கள் மூர்த்தி, வேலு, ஆகியோரால்தான் தமிழகத்தில் ரயில்வேயில் குறிப்பிடத்தக்க சாதனை அடைந்து. அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அழகிரி எந்தவித பொறுப்பும் இல்லாமல் தென் தமிழ் நாட்டை தன்னுடைய கண் அசைவில் வைத்திருந்தார். இப்பொழுது அண்ணன் அழகிரிக்கு கேபணட் மந்திரியாகிவிட்டார். இரயிலவே மினிஸ்டர் இல்லையென்றால் என்ன தமிழகத்தின் அத்தனை தேவைகளையும் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் நிறைவேற்றுவார். என்று அல்லக்கை, அடி வருடி, ஜிங்கிடி, ஆகியோர் சொல்லக்கூடாது. வாக்களித்த மக்கள் சொல்லவேண்டும், அண்ணன் ரெம்ப நல்லவர் என்று. கலைஞர் மேல் படிந்த கலங்கத்தை துடைத்து புண்ணியம் தேடிக்கொள்ளவார் என்று நம்புவோமாக. படித்த பமக வேலுவைக் காட்டிலும் படிக்காத மூர்த்தி நிறைய சாதித்தார் என்று கூறுவார்கள்.


1 comment:

Anonymous said...

nachichunu iruku