Sunday, March 28, 2010

வலைப்பதிவு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

        அலுவலகத்தில் பக்கதில் அமர்ந்திருக்கும் சென்னை நண்பருக்கு வேலைப்பளு அதிகமாகும் பொழுதும், வேலையில் சலிப்பு ஏற்படும் பொழுதும், உடனே கேண்டீனுக்கு சென்று விட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி வருவார். கேண்டின் புறப்படும் பொழுது உடன் நமக்கு அழைப்பு வரும். நண்பரே நீங்கள் சென்று வாருங்கள் என்று சொல்லி முடிக்கும் முன் (அவருடைய பாஷையிலே அவர் சொல்வதை)   XXXXXXXXXX , எப்பபாத்தாலும் பதிவு, பின்னூட்டம்னு அது இதுன்னு டேய் மாத்தி மாத்தி சொறிஞ்சிகிறிங்க. இவனுக அவனுகளுக்கு ஓட்டுப் போடுறது, அவனுக இவன்கழுக்குது ஓட்டு போடுறது. இதுக்கு எதற்கு நேரத்தை வேஸ்ட் பன்றானுக. என்று கூறிகொண்டே சென்றுவிடுவார்.

(நாகரீகம் கருதி சென்னை நண்பர் கூறியதை XXXXXXXXX அப்படியே போட வில்லலை) அப்படி பேசுகிறார் என்பதற்காக நண்பர் மோசமானவர் இல்லை. தங்கமானவர், இனிமையானவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதனால் பேசும் பொழுது சென்னை பாஷை கூடவே ஒட்டிக்கொள்கிறது.

அவருக்கு பதில் சொல்வதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மார்ச் 22 உலக தண்ணீர் தினம் வந்தது.

வலையுலக நண்பர்கள் கலக்கிவிட்டார்கள். ஒரு நண்பர்  தண்ணீரை சேமிப்பது எப்படி என்பதை 40 வினாடிகளில் ஒரு குறும்படம் போட்டு அனைத்து நண்பர்களுக்கும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார்., மற்றொரு நண்பர் வேதத்தில் தண்ணீரை சேமிப்பதற்கு கூறிய கருத்துக்களை தக்க ஆதாரத்துடன் எழுதியிருந்தார். அடுத்து ஒரு நண்பர் புவி வெப்பமடைவதற்கான காரணங்கள், அவற்றை குறைப்பதற்கான என்ன செய்யவேண்டும் என்றும், மற்றும் பல நண்பர்கள் சமூக அக்கறையுடன் பல பதிவுகள் எழுதியிருந்தனர்.  அத்தனையும் முத்துக்கள்.  மற்றொரு நண்பர் எனது வீட்டைச் சுற்றி மரங்களை நட்டியுள்ளேன்,  என்று செயலிலேயே காட்டிவிட்டார். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்தனையையும் எனது சென்னை நண்பரை அழைத்து காட்டினேன். வலையுலகம் என்பது பொழுபோக்குக்கு மட்டுமே என்று நினைத்திருந்த நண்பருக்கு அதிர்ச்சி.

இப்பொழுதெல்லாம் நண்பர் பிளாக் எப்படி எழுதுவது மற்றும் அதைப்பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக அதிக ஆர்வம் காட்டுகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். அவரிடமிருந்தும் நிறைய நல்ல பயனுள்ள தகவல்களை எதிர்பார்போம்.

எச்சரிக்கை - பாகம்-2

கடந்த பதிவில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாவதை மிருகங்களினாலும் தாங்கிக்கொள்ளமுடியாமல் யானை இறந்த சொய்தி. அதேபோல் மற்றுமொரு நிகழ்ச்சி. ஆழியாறு வனப்பகுதியிலிருந்து பொள்ளாச்சி நகருக்குள் வலம் வந்த சிறுத்தை. புவி அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதால் காட்டில் வாழும் வன விலங்குகளினாலும் காட்டில் வாழமுடியாமல் இறந்து விடுகிறது. அல்லது  வனத்தை ஒட்டியுள்ள மக்கள் வசிப்பிடங்களுக்கு விருந்தாளியாக வந்துவிடுகிறது. பொள்ளாச்சி திரு நீல கண்டர் வீதியில் பூட்டிக்கிடந்த பட்டறை அருகே சிறுத்தை ஓய்வைவொடுத்துக்கொண்டுருந்ததைப் பார்த்த பொது மக்கள் பயந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் உயிருடன் பிடிப்பதற்காக  மயக்கமருந்தை துப்பாக்கி மூலம் சுட்டு பிடித்தன்ர். 30 கிலோ எடையுள்ள 2 வயது சிறுத்தைப்புலியை மீண்டும் தண்ணீர் பள்ளம் என்ற இடத்தில் கொண்டுபேய் விட்டுவிட்டனர்.

வீட்டின் சுற்றுப்புறத்தில் இடமிருந்தால் பயன்படுத்திய தண்ணீரை கொண்டு மரம் வளருங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். -நம்மால் முடிந்த சிறிய உதவி
  
     
   
நான் ஒரு இரண்டுவருட குழந்தை என்னைப்பிடிப்பிப்பதற்கா ஊசி, மயக்கமருந்து,துப்பாக்கி .......
  
  

                             சிறுத்தை  பிடிப்பதை வேடிக்கைப் பார்க்கும் பொதுமக்கள்.


                                   கால் நடை மருத்துவர் மனோகரன்,மற்றும் டி.எஸ்.பி,

   

பிடிபட்ட சிறுத்தைப் பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது. என்னை பிடிப்பதற்கா? இத்தனைப் படைகள் என்று அப்பாவியாக கேட்பதுபோல் இருக்கிறது.

நண்பர்களே! படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அப்படியே ஓட்டும் போட்டுவிடுங்கள்.
நன்றி

12 comments:

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை .

புகைப்படங்கள் அனைத்தும் அருமை !

தொடர்ந்து எழுதுங்கள் .

பகிர்வுக்கு நன்றி !

சென்னைத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

:)

DREAMER said...

அறிய புகைப்படத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி!

-
DREAMER

venkat said...

பனித்துளி சங்கர் அவர்களின் வருகைக்கு நன்றி .

venkat said...

தேங்க்ஸ் ட்ரீமர்

Unknown said...

arumaiyana pathivu

google.com said...

அருமையான புகைப்படங்கள் சிந்தனை



Thanku


Roja

Kiruthigan said...

பூனைக்குட்டி மாதிரியே இருக்கு சார் அது..
நல்லாயிருக்கு பதிவு..

ப.கந்தசாமி said...

சிறுத்தையின் படங்கள் சூப்பர். நான் உங்களுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கேன். நம்மூட்டுக்கு வாங்க.

துபாய் ராஜா said...

அருமையான கருத்துக்கள். அழகான படங்கள்.

RAGUNATHAN said...

யாரு சார் அந்த சென்னை நண்பர்? எனக்குத் தெரியாம? :)

venkat said...

தேங்க்ஸ் ரகு