Saturday, September 12, 2009

ஆனந்தம்..

உன்னதமான அனுபவம்.

கோவை வேளாண்மைதுறை பல்கழைக்கழகத்துக்கு  தமிழ் நாட்டில்
முக்கியமான இடம் உண்டு. இங்கு படித்து பல்வேறு துறைகளிலும், பல்வேறு இடங்களிலும் பணி புரிந்துவிட்டு  ஓய்வு பெற்று தாத்தாவாகிவிட்ட முன்னால் மாணவர்களின் சந்துப்பு இன்று (12-09-2009) கோவை வேளான்மை பல்கழைக்கழகத்தில்  நடந்தது. நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டவரக்ள் ஒருவரை ஒருவர் ஆர தழுவிக்கொண்டனர்.
பேரன் பேத்தி சொத்து சுகம் அனைத்தையும் அனுபவித்துவிட்டு வந்த தாத்தாக்களுக்கு அங்கு கிடைக்காத ஆனந்தம் பழைய நண்பர்களை பார்த்தபொழுது அடைந்த ஆனந்தம் பார்பதற்கு பரவசமாக இருந்தது. மற்ற குடும்ப உறவுகளைக்காட்டிலும், நண்பன் என்ற உறவு மேண்மையானது.

1 comment:

Anonymous said...

anantham parama anantham